என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்பெண்ணையாற்றில் வெள்ளம்: சாத்தனூர் அணை நீர்மட்டம் 9 நாட்களில் 20 அடி உயர்வு
Byமாலை மலர்11 Sep 2017 2:34 PM GMT (Updated: 11 Sep 2017 2:34 PM GMT)
சாத்தனூர் அணை நீர் மட்டம் 9 நாட்களில் 20 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் கிராமம் வழியாக பாய்ந்து ஓடும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது.
இந்த அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சாத்தனூர் அணையின் நீர்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி.அணை நிரம்பியது. எனவே, அந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த வெள்ள தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துரை வழியாக சாத்தனூர் அணைக்கு ஆர்ப்பரித்து வருகிறது.
கடந்த 3-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 75.35 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 1,172 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
இந்நிலையில், அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2,782 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, 94.30 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2,978 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,303 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அதன்படி, கடந்த 9 நாள்களில் அணையின் நீர்மட்டம் 20 அடி உயர்ந்துள்ளது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் கிராமம் வழியாக பாய்ந்து ஓடும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது.
இந்த அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சாத்தனூர் அணையின் நீர்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி.அணை நிரம்பியது. எனவே, அந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த வெள்ள தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துரை வழியாக சாத்தனூர் அணைக்கு ஆர்ப்பரித்து வருகிறது.
கடந்த 3-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 75.35 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 1,172 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
இந்நிலையில், அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2,782 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்தது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, 94.30 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2,978 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,303 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அதன்படி, கடந்த 9 நாள்களில் அணையின் நீர்மட்டம் 20 அடி உயர்ந்துள்ளது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X