என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆஸ்பத்திரியில் அனுமதி
Byமாலை மலர்26 Jun 2017 6:15 AM GMT (Updated: 26 Jun 2017 6:15 AM GMT)
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் கூறினர்.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஆறுக்குட்டி. இவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. ஆவார்.
நேற்றுமுன்தினம் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து வீடு திரும்பினார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதுபற்றி டாக்டர்கள் கூறும் போது, ‘‘ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார்’ என்றனர்.
கட்சி நிர்வாகிகள் கூறும் போது, ‘‘கடந்த வாரம் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்தார். அப்போது ஓட்டல்களில் சாப்பிட்டதன் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. டாக்டர்களின் சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார், இன்று மாலையில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்’ என்றனர்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஆறுக்குட்டி. இவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. ஆவார்.
நேற்றுமுன்தினம் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து வீடு திரும்பினார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதுபற்றி டாக்டர்கள் கூறும் போது, ‘‘ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார்’ என்றனர்.
கட்சி நிர்வாகிகள் கூறும் போது, ‘‘கடந்த வாரம் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்தார். அப்போது ஓட்டல்களில் சாப்பிட்டதன் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. டாக்டர்களின் சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளார், இன்று மாலையில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்’ என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X