search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதாள சாக்கடை குழாயால் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
    X

    பாதாள சாக்கடை குழாயால் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

    திருவள்ளுவர் அருகே பாதாள சாக்கடை பணிக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த குழியால் நிலைதடுமாறி லாரியின் சக்கரத்தில் விழுந்து வாலிபர் பலியானார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜெயக்குமார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும் ஐசக் (4), லெடியல் (2) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று இரவு திருவள்ளூரில் உள்ள கடைக்கு ஜெயக்குமார் மகன் ஐசக்கு சென்றார். ஜெ.என்.சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த குழி அருகே சென்ற போது நிலைதடுமாறி அருகே சென்று கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் ஜோம்ஸ் ஜெயக்குமார் விழுத்தார். அதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.


    குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.தகவல் அறிந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, துணை சூப்பிரண்ட் புகழேந்தி, இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    Next Story
    ×