என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயிலில் பெண் பயணியிடம் 15 பவுன் நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை
Byமாலை மலர்28 April 2017 11:08 AM GMT (Updated: 28 April 2017 11:08 AM GMT)
நெல்லை வந்த ரெயிலில் பெண் பயணியிடம் 15 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள படப்பக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்புலெட்சுமி. இவரது கணவர் புதுச்சேரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை பார்க்க அங்கு சென்றிருந்த சுப்புலெட்சுமி, நேற்று சொந்த ஊர் திரும்புவதற்காக விருத்தாச்சலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
அங்கிருந்து அவர் கச்சி குடாவில் இருந்து நெல்லை வழியாக கொச்சிவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லைக்கு வந்தார். அப்போது சுப்புலெட்சுமி தனது 15 பவுன் தங்கநகைகள் வைத்திருந்த கைப்பை மற்றும் பொருட்களை தனது அருகே வைத்து கொண்டு படுத்து தூங்கினார்.
இன்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த போது தூங்கி எழுந்த சுப்புலெட்சுமி, அருகில் வைத்திருந்த நகைப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து அவர் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள படப்பக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்புலெட்சுமி. இவரது கணவர் புதுச்சேரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை பார்க்க அங்கு சென்றிருந்த சுப்புலெட்சுமி, நேற்று சொந்த ஊர் திரும்புவதற்காக விருத்தாச்சலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
அங்கிருந்து அவர் கச்சி குடாவில் இருந்து நெல்லை வழியாக கொச்சிவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லைக்கு வந்தார். அப்போது சுப்புலெட்சுமி தனது 15 பவுன் தங்கநகைகள் வைத்திருந்த கைப்பை மற்றும் பொருட்களை தனது அருகே வைத்து கொண்டு படுத்து தூங்கினார்.
இன்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த போது தூங்கி எழுந்த சுப்புலெட்சுமி, அருகில் வைத்திருந்த நகைப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து அவர் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X