search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் பெண் பயணியிடம் 15 பவுன் நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை
    X

    ரெயிலில் பெண் பயணியிடம் 15 பவுன் நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை

    நெல்லை வந்த ரெயிலில் பெண் பயணியிடம் 15 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை அருகே உள்ள படப்பக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்புலெட்சுமி. இவரது கணவர் புதுச்சேரியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரை பார்க்க அங்கு சென்றிருந்த சுப்புலெட்சுமி, நேற்று சொந்த ஊர் திரும்புவதற்காக விருத்தாச்சலம் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கிருந்து அவர் கச்சி குடாவில் இருந்து நெல்லை வழியாக கொச்சிவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லைக்கு வந்தார். அப்போது சுப்புலெட்சுமி தனது 15 பவுன் தங்கநகைகள் வைத்திருந்த கைப்பை மற்றும் பொருட்களை தனது அருகே வைத்து கொண்டு படுத்து தூங்கினார்.

    இன்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்த போது தூங்கி எழுந்த சுப்புலெட்சுமி, அருகில் வைத்திருந்த நகைப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து அவர் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×