search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: 3 போட்டியிலும் தோற்று ஸ்ரீகாந்த் வெளியேறினார்
    X

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: 3 போட்டியிலும் தோற்று ஸ்ரீகாந்த் வெளியேறினார்

    உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பைனல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, 3 லீக் போட்டிகளிலும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார்.
    துபாய்:

    முன்னணி 8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பைனல் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 17-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    ஆண்கள் ஒற்றையரில் பங்கேற்கும் வீரர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவில் லீ சோங் வெய் (மலேசியா), லாங் அங்குஸ் (ஹாங்காங்), சன் வான் ஹோ (தென்கொரியா), ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங் (சீனா) ஆகியோரும், ‘பி’ பிரிவில் ஸ்ரீகாந்த் (இந்தியா), விக்டர் ஆக்ஸ்ல்சென் (டென்மார்க்), ஷி யுஜி (சீனா), ஷோய் டின் சென் (சீன தைபே) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் லீக் போட்டியில் 4-ம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் ‘நம்பர் ஒன்’ வீரரும், உலக சாம்பியனுமான விக்டர் ஆக்ஸ்ல்சென்னுடன் (டென்மார்க்) மோதினார். இதில், விக்டர் ஆக்ஸல்சென்னின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 21-13, 21-17 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

    இதேபோல், நேற்று முன்தினம் நடந்த 2-வது லீக் போட்டியில் தைவான் நாட்டை சேர்ந்த சௌ டின் சென்னிடம் 18-21, 18-21 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

    இந்நிலையில். நேற்று நடந்த 3-வது லீக் போட்டியிலும் சீன வீரர் ஷி யுகியிடம் 17-21, 21-19, 14-21 என்ற புள்ளி கணக்கில் தோற்றார்.

    இதையடுத்து, தான் பங்கேற்ற 3 ஆட்டத்திலும் தோற்று போட்டியில் இருந்து ஸ்ரீகாந்த் வெளியேறினார்.
    Next Story
    ×