search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவார் -அசாருதீன்
    X

    டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவார் -அசாருதீன்

    டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஓய்வு குறித்து டோனி மனதில் என்ன இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. அனேகமாக அவர் 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவார் என்று கருதுகிறேன்.

    அந்த போட்டி தொடரோடு ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறேன். அவரது எதிர்காலம் குறித்து அவர் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.

    வருங்காலத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி தொடர் நடக்கும் என்று கருதுகிறேன். ஆனால் தற்போதைய எல்லை பிரச்சினை சூழ் நிலைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.

    Next Story
    ×