என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய கோப்பை ஹாக்கி: வங்காளதேசத்தை 7-0 என்ற கணக்கில் புரட்டியது இந்தியா
Byமாலை மலர்13 Oct 2017 3:31 PM GMT (Updated: 13 Oct 2017 3:32 PM GMT)
வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
டாக்கா:
10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
இன்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடியது. இந்தியாவின் ஹர்மந்தன் பீரித் இரட்டை கோல்கள் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஏ அணியில் வரிசை பட்டியலில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்தியா லீக் ஆட்டத்தில் கடைசியாக வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியை எதிர்க்கொள்கிறது. பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் ஏற்கனவே உள்ளூர் அணியான வங்காளதேசத்தை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
இன்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடியது. இந்தியாவின் ஹர்மந்தன் பீரித் இரட்டை கோல்கள் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஏ அணியில் வரிசை பட்டியலில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. இந்தியா லீக் ஆட்டத்தில் கடைசியாக வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணியை எதிர்க்கொள்கிறது. பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் ஏற்கனவே உள்ளூர் அணியான வங்காளதேசத்தை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X