search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக் போட்டிகளில் அரியானா, பெங்களூரு அணிகள் வெற்றி
    X

    புரோ கபடி லீக் போட்டிகளில் அரியானா, பெங்களூரு அணிகள் வெற்றி

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி தொடரின் லீக் சுற்று போட்டிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

    ஜெய்ப்பூர்:

    5-வது புரோ கபடி லீக் திருவிழா 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

    இன்று (11-ம் தேதி) நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 37-27 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. 

    முன்னதாக நடந்த மற்றொரு வைல்டு கார்டு லீக் போட்டியில் தபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 35-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ரோஹித் குமார் அதிகபட்சமாக 12 தொடுபுள்ளிகள் எடுத்தார்.



    இன்றைய ஆட்டங்களின் முடிவில் 'ஏ' பிரிவு புள்ளிப்பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 74 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணி 51 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், தபாங் டெல்லி அணி 37 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன. 'பீ' பிரிவு புள்ளிப்பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி 44 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

    நாளை (12-ம் தேதி) நடைபெறும் லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. நாளையுடன் ஜெய்ப்பூர் சுற்று ஆட்டங்கள் நிறைவடைகின்றன. நாளை மறுநாள் புனே சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.
    Next Story
    ×