என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்
Byமாலை மலர்23 Jun 2017 6:01 AM GMT (Updated: 23 Jun 2017 6:31 AM GMT)
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது. தொடக்க நாளான நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.
11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது.
இதில் இந்தியா, நடப்பு செம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் ஜூலை 15-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதல் அரை இறுதி ஜூலை 18-ந் தேதி, 2-வது அரை இறுதி ஜூலை 20-ந் தேதியும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 23-ந் தேதி லண்டனில் நடக்கிறது.
தொடக்க நாளான நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்தியா -இங்கிலாந்து, நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 29-ந் தேதி வெஸ்ட் இன்டீசுடனும், ஜூலை 2-ந் தேதி பாகிஸ்தானுடன், 5-ந் தேதி இலங்கையுடனும், 8-ந் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 12-ந் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 15-ந் தேதி நியுசிலாந்துடனும் மோதுகிறது.
இந்திய மகளிர் அணி 2005-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த முறை இந்தியா சாதிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இந்தியா, நடப்பு செம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் ஜூலை 15-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதல் அரை இறுதி ஜூலை 18-ந் தேதி, 2-வது அரை இறுதி ஜூலை 20-ந் தேதியும் நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 23-ந் தேதி லண்டனில் நடக்கிறது.
தொடக்க நாளான நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்தியா -இங்கிலாந்து, நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 29-ந் தேதி வெஸ்ட் இன்டீசுடனும், ஜூலை 2-ந் தேதி பாகிஸ்தானுடன், 5-ந் தேதி இலங்கையுடனும், 8-ந் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 12-ந் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 15-ந் தேதி நியுசிலாந்துடனும் மோதுகிறது.
இந்திய மகளிர் அணி 2005-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த முறை இந்தியா சாதிக்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X