search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.லில் சிறந்த ஆட்டம்: ரி‌ஷப்பான்டுக்கு தெண்டுல்கர் பாராட்டு
    X

    ஐ.பி.எல்.லில் சிறந்த ஆட்டம்: ரி‌ஷப்பான்டுக்கு தெண்டுல்கர் பாராட்டு

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய டெல்லி வீரர் ரிஷப் பான்ட்டை கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
    குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ரி‌ஷப் பான்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 97 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயதான அவரது ஆட்டத்தை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

    ஐ.பி.எல். வரலாற்றில் நான் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ரி‌ஷப் பான்ட்டை கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.



    இதைபோல ஷேவாக், கங்குலி உள்ளிட்ட முன்னாள் பிரபல வீரர்களும் பாராட்டினர்.
    Next Story
    ×