என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை
Byமாலை மலர்16 Nov 2017 4:47 AM GMT (Updated: 16 Nov 2017 4:47 AM GMT)
கேரளாவில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மண்ணாசேரி முக்கம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். திருச்சூர் இடதுறுத்தி பகுதியைச் சேர்ந்த உஸ்மல் உல்லாஸ் (வயது 22) என்ற மாணவியும் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
நேற்று மாலை மாணவி உஸ்மல் உல்லாஸ் திடீரென்று கல்லூரியின் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதிக்க முயற்சி செய்தார். அவரது சக தோழிகள் உஸ்மலின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றத்தை வைத்து ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்து அவரை பின் தொடர்ந்து சென்று தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் உஸ்மல் உல்லாஸ் கீழே குதித்து விட்டார்.
உடனடியாக அவரை அதே கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் முக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அந்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தோழிகள் நேற்று மாலை உஸ்மல் உல்லாசுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்ததாகவும், போனில் அவர், கோபமாகவும் கண்ணீருடனும் பேசியதாகவும் அதன் பிறகே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அந்த மாணவியின் செல்போனுக்கு பேசியது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மண்ணாசேரி முக்கம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். திருச்சூர் இடதுறுத்தி பகுதியைச் சேர்ந்த உஸ்மல் உல்லாஸ் (வயது 22) என்ற மாணவியும் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
நேற்று மாலை மாணவி உஸ்மல் உல்லாஸ் திடீரென்று கல்லூரியின் 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதிக்க முயற்சி செய்தார். அவரது சக தோழிகள் உஸ்மலின் நடவடிக்கையில் தெரிந்த மாற்றத்தை வைத்து ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்து அவரை பின் தொடர்ந்து சென்று தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் உஸ்மல் உல்லாஸ் கீழே குதித்து விட்டார்.
உடனடியாக அவரை அதே கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் முக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அந்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தோழிகள் நேற்று மாலை உஸ்மல் உல்லாசுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்ததாகவும், போனில் அவர், கோபமாகவும் கண்ணீருடனும் பேசியதாகவும் அதன் பிறகே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அந்த மாணவியின் செல்போனுக்கு பேசியது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X