search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு
    X

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

    மராட்டிய மாநிலத்திற்கு வருகை தந்துள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, மும்பையில் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து பேசினார்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் வந்துள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், இன்று மும்பையில் அவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து பேசினார். அப்போது, உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரேவும் உடனிருந்தார்.

    இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, இந்த சந்திப்பில் முக்கிய விவகாரம் எதும் பேசவில்லை. சாதாரன அரசியல் ரீதியிலான சந்திப்பு என கூறியுள்ளது.

    மத்திய பா.ஜ.க அரசு மீது சிவசேனா சரமாரியான குற்றச்சாட்டுகளை தொடுத்து வரும் நிலையில், மம்தா பானர்ஜியின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×