search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் துணிகரம்: ரூ.12 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளை
    X

    டெல்லியில் துணிகரம்: ரூ.12 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளை

    டெல்லியில் நகை உற்பத்தி செய்யும் கிடங்கில் இருந்து ரூ.12 கோடி மதிப்புடைய தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நகை உற்பத்தி செய்யும் கிடங்கில் இருந்து ரூ.12 கோடி மதிப்புடைய தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    டெல்லியின் கரோல்பாக் பகுதியில் நகைகளை உற்பத்தி செய்யும் கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து மறுநாள் இதன் உரிமையாளர் அங்கு சென்றார்.



    அப்போது அந்த கிடங்கில் உள்ள இரும்பு அலமாரி கதவுகள் கேஸ் வெல்டிங் மூலம் அறுக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ந்தார். உடனடியாக இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலறிந்து வந்த போலீசார் அங்கு சோதனை செய்தனர். அதில், 6.80 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதேபோல், மற்றொரு பகுதியில் உள்ள நகை கிடங்கில் இருந்து 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றதையும் கண்டறிந்தனர்.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையடித்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×