search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் கட்டிடம் இடிந்து காயத்துடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பலி
    X

    பெங்களூருவில் கட்டிடம் இடிந்து காயத்துடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை பலி

    பெங்களூருவில் கட்டிடம் இடிந்து காயத்துடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது.
    பெங்களூரு:

    கடந்த திங்கட்கிழமை அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த எஜிபுராவில் சிலிண்டர் வெடித்து 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

    இதில் 3 வயது குழந்தை சஞ்சனா காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த குழந்தையும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது. இதைத் தொடர்ந்து கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
    Next Story
    ×