search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு- இரு வீரர்கள் படுகாயம்
    X

    எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு- இரு வீரர்கள் படுகாயம்

    காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்ப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
    ஜம்மு:

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அவ்வகையில், கடந்த ஆண்டில் 228 முறை இதைப்போன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் படையினர் நடத்தியுள்ளனர். இந்த ஆண்டில் அவர்களின் அத்துமீறல் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேதிவரை 285 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், இந்த மாதத்திலும் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் பலகோட் அருகேயுள்ள பிம்பர்காலி எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கையெறி குண்டுகளையும் வீசினர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த இரு வீரர்கள் படுமாயம் அடைந்தனர்.
    Next Story
    ×