என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொது இடங்களில் மது குடிக்க தடை: கோவா முதல் மந்திரி அறிவிப்பு
Byமாலை மலர்18 Sep 2017 3:06 AM GMT (Updated: 18 Sep 2017 3:06 AM GMT)
கோவாவில் பொது இடங்களில் மது குடிக்க தடை விதிக்கப்படும் என முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பனாஜி:
கோவாவின் பனாஜியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கோவாவில் பொது இடங்களில் மது குடிப்பவர்களால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. எனவே மது குடிக்க விரும்புபவர்கள் வீட்டிலேயே குடித்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் குடிக்க கூடாது.
இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. விரைவில் பொது இடங்களில் மது குடிக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 15 தினங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
மதுக்கடை அருகில் மக்கள் குடிப்பது கண்டறியப்பட்டால் மதுக்கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சாலையோரங்களில் மது குடிப்பவர்கள், மது குடித்த பின்னர் பாட்டில்களை சாலையில் உடைத்துப் போட்டு விடுவதால் பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற சிரமங்களை களைவதால் சுத்தமும், சுகாதாரமும் பேணப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவாவின் பனாஜியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கோவாவில் பொது இடங்களில் மது குடிப்பவர்களால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. எனவே மது குடிக்க விரும்புபவர்கள் வீட்டிலேயே குடித்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் குடிக்க கூடாது.
இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. விரைவில் பொது இடங்களில் மது குடிக்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 15 தினங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
மதுக்கடை அருகில் மக்கள் குடிப்பது கண்டறியப்பட்டால் மதுக்கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சாலையோரங்களில் மது குடிப்பவர்கள், மது குடித்த பின்னர் பாட்டில்களை சாலையில் உடைத்துப் போட்டு விடுவதால் பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற சிரமங்களை களைவதால் சுத்தமும், சுகாதாரமும் பேணப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X