என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியானா சிறுவன் கொலை எதிரொலி: மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளிகளே பொறுப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
Byமாலை மலர்15 Sep 2017 12:01 AM GMT (Updated: 15 Sep 2017 12:01 AM GMT)
பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சி.பி.எஸ்.இ. வாரியம் அறிவித்து இருப்பதுடன், புதிய வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி:
அரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் சமீபத்தில் பள்ளி பேருந்து நடத்துனர் ஒருவரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயன்ற போது இந்த கொலை நடந்தது. இதைப்போல டெல்லி பள்ளியில் 5 வயது சிறுமி ஒருவர் பள்ளி ஊழியரால் கற்பழிக்கப்பட்டாள்.
இந்த சம்பவங்கள் மாணவர்களின் பெற்றோரிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சி.பி.எஸ்.இ. வாரியம் அறிவித்து இருப்பதுடன், புதிய வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டு உள்ளது.
குறிப்பாக பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மாணவர்களின் உளவியல் செயல்பாடு ஆய்வு, பாதுகாப்பு தணிக்கை, பாதுகாப்பு தேவைகளை கண்டறிய பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் குழுக்கள் அமைத்தல், போலீஸ் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.
அதன்படி, ‘மாணவ-மாணவிகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதுகாப்பு உணர்வுடன் கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழலை பெறுவது அவர்களது அடிப்படை உரிமையாகும். இந்த வசதிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டியது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு’ என பள்ளிகளை சி.பி.எஸ்.இ. வலியுறுத்தி உள்ளது.
அரியானாவின் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் சமீபத்தில் பள்ளி பேருந்து நடத்துனர் ஒருவரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டான். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயன்ற போது இந்த கொலை நடந்தது. இதைப்போல டெல்லி பள்ளியில் 5 வயது சிறுமி ஒருவர் பள்ளி ஊழியரால் கற்பழிக்கப்பட்டாள்.
இந்த சம்பவங்கள் மாணவர்களின் பெற்றோரிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என சி.பி.எஸ்.இ. வாரியம் அறிவித்து இருப்பதுடன், புதிய வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டு உள்ளது.
குறிப்பாக பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மாணவர்களின் உளவியல் செயல்பாடு ஆய்வு, பாதுகாப்பு தணிக்கை, பாதுகாப்பு தேவைகளை கண்டறிய பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் குழுக்கள் அமைத்தல், போலீஸ் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட விதிமுறைகளை சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.
அதன்படி, ‘மாணவ-மாணவிகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதுகாப்பு உணர்வுடன் கல்வி பயில்வதற்கு ஏற்ற சூழலை பெறுவது அவர்களது அடிப்படை உரிமையாகும். இந்த வசதிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டியது பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பு’ என பள்ளிகளை சி.பி.எஸ்.இ. வலியுறுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X