என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலைக்கு சென்ற நர்சை கடத்தி சிறைவைத்து கற்பழிப்பு - பிரபல ரவுடி கைது
Byமாலை மலர்4 Aug 2017 12:08 PM GMT (Updated: 4 Aug 2017 12:08 PM GMT)
திருவனந்தபுரத்தில் வேலைக்கு சென்றபோது நர்சை கடத்தி சிறைவைத்து ஒருவாரமாக கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பனச்சமூடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் நர்சிங் படித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு கேரள மாநிலம் வெள்ளறடை அருகே செம்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு வேலை கிடைத்தது.
அவர் தினமும் தனது வீட்டில் இருந்து பஸ் மூலம் நர்சு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி வழக்கம் போல வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற அந்த நர்சு அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உற வினர்கள் அவரை தேடி அவர் பணிபுரிந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது அந்த நர்சு சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தங்களது உறவினர்கள் மற்றும் நர்சின் தோழிகளின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் நர்சு மாயமானது பற்றி வெள்ளறடை போலீசில் புகார் செய்யப்பட்டது. நர்சின் செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
அப்போது பனச்சமூடு அருகே உள்ள சிறிய கொல்லை என்ற இடத்தில் அந்த செல்போன் இருப்பது செல்போன் டவர் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது.
இதை தொடர்ந்து வெள்ளறடை போலீசார் சின்னகொல்லைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்து வீட்டில் அந்த நர்சு அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த நர்சு ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற போது வெள்ளறடையை சேர்ந்த பிரபல ரவுடி சுனி (வயது 33) என்பவர் அவரை காரில் கடத்தினார்.
பிறகு இங்குள்ள தோட்டத்து வீட்டில் அந்த நர்சை அடைத்துவைத்து அவர் கற்பழித்து உள்ளார். கடந்த ஒரு வாரமாக நர்சுக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.
இதைதொடர்ந்து நர்சை கடத்தி கற்பழித்ததாக ரவுடி சுனியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடத்தல், அடி-தடி, மிரட்டல், பணம் பறிப்பு உள்பட பல வழக்குகள் உள்ளது. எனவே ரவுடி சுனி இந்த நர்சைப்போல வேறு யாரையும் கற்பழித்து உள்ளாரா? தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பனச்சமூடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் நர்சிங் படித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு கேரள மாநிலம் வெள்ளறடை அருகே செம்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு வேலை கிடைத்தது.
அவர் தினமும் தனது வீட்டில் இருந்து பஸ் மூலம் நர்சு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி வழக்கம் போல வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற அந்த நர்சு அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உற வினர்கள் அவரை தேடி அவர் பணிபுரிந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது அந்த நர்சு சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து தங்களது உறவினர்கள் மற்றும் நர்சின் தோழிகளின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் நர்சு மாயமானது பற்றி வெள்ளறடை போலீசில் புகார் செய்யப்பட்டது. நர்சின் செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
அப்போது பனச்சமூடு அருகே உள்ள சிறிய கொல்லை என்ற இடத்தில் அந்த செல்போன் இருப்பது செல்போன் டவர் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது.
இதை தொடர்ந்து வெள்ளறடை போலீசார் சின்னகொல்லைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்து வீட்டில் அந்த நர்சு அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த நர்சு ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற போது வெள்ளறடையை சேர்ந்த பிரபல ரவுடி சுனி (வயது 33) என்பவர் அவரை காரில் கடத்தினார்.
பிறகு இங்குள்ள தோட்டத்து வீட்டில் அந்த நர்சை அடைத்துவைத்து அவர் கற்பழித்து உள்ளார். கடந்த ஒரு வாரமாக நர்சுக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.
இதைதொடர்ந்து நர்சை கடத்தி கற்பழித்ததாக ரவுடி சுனியை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடத்தல், அடி-தடி, மிரட்டல், பணம் பறிப்பு உள்பட பல வழக்குகள் உள்ளது. எனவே ரவுடி சுனி இந்த நர்சைப்போல வேறு யாரையும் கற்பழித்து உள்ளாரா? தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X