என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்குவங்க வெள்ள பாதிப்பு மனிதர்களால் விளைந்தது: மத்திய அரசு மீது மம்தா தாக்கு
Byமாலை மலர்27 July 2017 11:01 PM GMT (Updated: 27 July 2017 11:01 PM GMT)
மேற்குவங்காளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மழையால் ஏற்பட்டதல்ல, மனிதர்களாலே விளைந்தது என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
மேற்குவங்காள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 160 கிராமங்களில் சுமார் 20 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்குவங்காளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மழையால் ஏற்பட்டதல்ல, மனிதர்களாலே விளைந்தது என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஹைவுரா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட மம்தா பானர்ஜி இதனை தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “இந்த சீசனில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் இந்த வெள்ள பாதிப்பு மழையால் வந்தது அல்ல. ஆனால் இது மனிதர்களின் செயல்களால் விளைந்தது.
தாமோதர் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியாக தண்ணீரே வெள்ளப் பெருக்குக்கு காரணம். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளில் மத்திய அரசு தூர்வார வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் இந்த பருவ மழையால் மேற்கு வங்காளம் கடுமையாக பாதிக்கப்படைகிறது. 2012-ம் ஆண்டிலே இந்த விவகாரத்தை எழுப்பினேன். ஆனால் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த பிரச்சனை தீராது” என்றார்.
மேற்குவங்காள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 160 கிராமங்களில் சுமார் 20 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்குவங்காளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மழையால் ஏற்பட்டதல்ல, மனிதர்களாலே விளைந்தது என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஹைவுரா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட மம்தா பானர்ஜி இதனை தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “இந்த சீசனில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் இந்த வெள்ள பாதிப்பு மழையால் வந்தது அல்ல. ஆனால் இது மனிதர்களின் செயல்களால் விளைந்தது.
தாமோதர் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியாக தண்ணீரே வெள்ளப் பெருக்குக்கு காரணம். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளில் மத்திய அரசு தூர்வார வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு வருடமும் இந்த பருவ மழையால் மேற்கு வங்காளம் கடுமையாக பாதிக்கப்படைகிறது. 2012-ம் ஆண்டிலே இந்த விவகாரத்தை எழுப்பினேன். ஆனால் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த பிரச்சனை தீராது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X