என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: டி.எஸ்.பி அடித்துக் கொலை - 'நம்பிக்கையின் மீதான தாக்குதல்' என முதல்வர் கண்டனம்
Byமாலை மலர்23 Jun 2017 6:07 PM GMT (Updated: 23 Jun 2017 6:07 PM GMT)
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி மர்மகும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நம்பிக்கையின் மீதான தாக்குதல் என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜாபியா மசூதிக்கு வெளியே போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித் என்பவர் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது 200 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. கூட்டத்தில் இருந்து தப்பிக்க டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். என்றாலும் கும்பல் தொடர்ந்து தாக்கியது. டி.எஸ்.பி. சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இறந்த டி.எஸ்.பி. சாதாரண உடையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மசூதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில்தான் அவரது வீடு உள்ளது. அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. செல்போனில் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட பிறகுதான் அடையாளம் தெரிந்தது.
ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி. கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் அடையாளம் தெரிய வந்தது. இன்று காலையில் கொலையுண்ட டி.எஸ்.பி.யின் இறுதிச் சடங்கு நடந்தது.
இந்நிலையில், போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி, “போலீஸ் டி.எஸ்.பி மீதான தாக்குதல் நம்பிக்கையின் மீதான தாக்குதல்” என கண்டனம் தெரிவித்தார்.
காஷ்மீர் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் காலித் ஜெஹாங்கீர் கூறும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி இருக்கும் தங்கள் முதலாளிகளை சந்தோஷப்படுத்த சிலரின் அடியாட்கள் மக்களையும் போலீசையும் அடித்துக் கொல்வதில் சாடிச இன்பம் அடைகின்றனர்.’ என தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜாபியா மசூதிக்கு வெளியே போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித் என்பவர் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது 200 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. கூட்டத்தில் இருந்து தப்பிக்க டி.எஸ்.பி. துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். என்றாலும் கும்பல் தொடர்ந்து தாக்கியது. டி.எஸ்.பி. சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். இறந்த டி.எஸ்.பி. சாதாரண உடையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மசூதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில்தான் அவரது வீடு உள்ளது. அவர் யார் என்று தெரியாமல் இருந்தது. செல்போனில் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட பிறகுதான் அடையாளம் தெரிந்தது.
ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. டி.எஸ்.பி. கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் அடையாளம் தெரிய வந்தது. இன்று காலையில் கொலையுண்ட டி.எஸ்.பி.யின் இறுதிச் சடங்கு நடந்தது.
இந்நிலையில், போலீஸ் டி.எஸ்.பி. முகமத் அயுப் பண்டித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி, “போலீஸ் டி.எஸ்.பி மீதான தாக்குதல் நம்பிக்கையின் மீதான தாக்குதல்” என கண்டனம் தெரிவித்தார்.
காஷ்மீர் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் காலித் ஜெஹாங்கீர் கூறும்போது, “கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைத் தாண்டி இருக்கும் தங்கள் முதலாளிகளை சந்தோஷப்படுத்த சிலரின் அடியாட்கள் மக்களையும் போலீசையும் அடித்துக் கொல்வதில் சாடிச இன்பம் அடைகின்றனர்.’ என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X