என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீதிபதி கர்ணனை விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு
Byமாலை மலர்21 Jun 2017 6:51 AM GMT (Updated: 21 Jun 2017 6:51 AM GMT)
நீதிபதி கர்ணனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்தார்.
43 நாட்களுக்கு பின்பு நீதிபதி எஸ்.கர்ணன் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நீதிபதி கர்ணனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவர் சார்பில் வக்கீல் இன்று மனுதாக்கல் செய்தார்.
அப்போது கர்ணனின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு தான் அவருக்கு தண்டனை விதித்தது. எனவே அந்த சிறப்பு அமர்வுதான் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியும் என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே 2 முறை நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இது போல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போதும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவையில் கைது செய்யப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அங்கிருந்து கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார்.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்தார்.
43 நாட்களுக்கு பின்பு நீதிபதி எஸ்.கர்ணன் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நீதிபதி கர்ணனை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவர் சார்பில் வக்கீல் இன்று மனுதாக்கல் செய்தார்.
அப்போது கர்ணனின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு தான் அவருக்கு தண்டனை விதித்தது. எனவே அந்த சிறப்பு அமர்வுதான் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியும் என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே 2 முறை நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இது போல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போதும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவையில் கைது செய்யப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அங்கிருந்து கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X