search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடியில் அரசு பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு
    X

    பரமக்குடியில் அரசு பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

    பரமக்குடியில் அரசு பெண் அதிகாரியிடம் ஹெல்மெட் திருடர் கள் 3½ பவுன் நகையை பறித்துச்சென்றனர்.

    ராமநாதபுரம்:

    பரமக்குடி கனி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி சிவராணி (வயது48). இவர் அரசின் வேளாண்மை துறையில் அதிகாரியாக உள்ளார்.

    நேற்று இரவு பணி முடிந்து சிவராணி வீட் டுக்கு புறப்பட்டார். சேது பதி நகர் பகுதியில் அவர் சென்றபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்த னர். ஹெல்மெட் அணிந் திருந்த அவர்கள், சிவராணி கழுத்தில் கடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத் தில் தப்பிச்சென்று விட்ட னர்.

    இதுகுறித்து பரமக்குடி நகர் போலீசில் சிவராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பால்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த வியாபாரி மனைவி மீனாட்சியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

    நேற்றும் அதேபோல் சம்பவம் நடந்திருப்பது பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பரமக்குடி நகரை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவ தால் வீட்டை விட்டு வெளியே வரவே பெண்கள் பயப்படுகிறார்கள்.

    ஹெல்மெட் திருடர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×