என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியுடன் கள்ளத்தொடர்பு: தொழிலாளியை கத்தியால் குத்திய கணவர்
Byமாலை மலர்13 Dec 2017 3:24 PM GMT (Updated: 13 Dec 2017 3:24 PM GMT)
வேப்பந்தட்டை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தொழிலாளியை கணவர் சரமாரியாக குத்தியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 40). இவரது மனைவி தமிழரசி (36).
இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் தமிழரசி நெருக்கமாக பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரமுத்துவிற்கு இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கண்ணனிடம் தனது மனைவியிடம் இனி பேசக்கூடாது என பலமுறை வீரமுத்து கண்டித்துள்ளார்.
ஆனாலும் கண்ணன் தமிழரசியிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரமுத்து சம்பவத்தன்று கண்ணனை வழி மறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் கண்ணனுக்கு பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கண்ணணை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை க்காகசேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X