search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியுடன் கள்ளத்தொடர்பு: தொழிலாளியை கத்தியால் குத்திய கணவர்
    X

    மனைவியுடன் கள்ளத்தொடர்பு: தொழிலாளியை கத்தியால் குத்திய கணவர்

    வேப்பந்தட்டை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தொழிலாளியை கணவர் சரமாரியாக குத்தியதால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 40). இவரது மனைவி தமிழரசி (36). 

    இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் தமிழரசி நெருக்கமாக பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீரமுத்துவிற்கு இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கண்ணனிடம் தனது மனைவியிடம் இனி பேசக்கூடாது என பலமுறை வீரமுத்து கண்டித்துள்ளார். 

    ஆனாலும் கண்ணன் தமிழரசியிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த வீரமுத்து சம்பவத்தன்று கண்ணனை வழி மறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் கண்ணனுக்கு பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.  

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கண்ணணை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை க்காகசேர்த்தனர். 
    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீரமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×