search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் ஆத்திரம்"

    கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை குத்தி கொலை செய்த கணவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் வசித்து வருபவர் ஐய்யப்பன். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (10), வர்ஷினி (8) ஆகிய 2 மகள்கள் உள்ளன.

    நேற்று இரவு குழந்தைகள் ஜெயஸ்ரீ, வர்ஷினி ஆகியோர் வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு போட்டு இருந்தது. இதுபற்றி அவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். உடனே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது சுகந்தி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அப்போது சுகந்தி கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகந்தியின் கணவர் ஐய்யப்பன் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் கள்ளக்காதலில் ஈடுபட்ட சுகந்தியை அவர் கத்தியால் குத்தி கொன்று விட்டு வீட்டை பூட்டி தப்பியது தெரியவந்தது.

    சுகந்திக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த ஐய்யப்பன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். ஆனால் சுகந்தி கள்ளக் காதலை கைவிட வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐய்யப்பன் மனைவியை கொன்றுள்ளார்.

    தப்பி ஓடிய ஐய்யப்பனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சேலையூரில் வாகன சோதனையின் போது போலீசாரிடம் ஐய்யப்பன் சிக்கினார். அவரை பிடித்து பள்ளிக்கரணை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மனைவியை கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×