என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புகார்
Byமாலை மலர்8 Dec 2017 9:37 AM GMT (Updated: 8 Dec 2017 9:37 AM GMT)
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
சென்னை:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்டச்செயலாளர் மாதவரம் சுதர்சனம், கு.க.செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்த பிறகு நிருபர்களை சந்தித்தனர். அப்போது எ.வ.வேலு கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சியினர் கூட்டத்துக்கு வந்த ஒவ்வொரு நிர்வாகிக்கும் 500 ருபாய் பணப்பட்டுவாடா செய்கின்றனர். இதை போலீசார் தடுக்காமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
தேனிமாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்வதை கண்டுபிடித்து அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தோம். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணம், கீ செயின் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து கொடுத்தோம். இதன் மீதும் எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.
அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடத்துபவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் அடையாள அட்டை, செல் நம்பர் போன்ற விவரங்களை கேட்பது ஏன்?
எனவே இதுபோன்ற தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
கடந்த தேர்தலின்போது பணப்பட்டு வாடா செய்த புகார் காரணமாக தான் தேர்தல் நிறுத்தப்பட்டது.
தேர்தலுக்காக தி.மு.க.வினர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஆனால் அ.தி. மு.க.வினர் தேர்தல் விதிகளை மீறி செயல்படுகின்றனர். எனவே பணப்பட்டுவாடா செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மாவட்டச்செயலாளர் மாதவரம் சுதர்சனம், கு.க.செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்த பிறகு நிருபர்களை சந்தித்தனர். அப்போது எ.வ.வேலு கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சியினர் கூட்டத்துக்கு வந்த ஒவ்வொரு நிர்வாகிக்கும் 500 ருபாய் பணப்பட்டுவாடா செய்கின்றனர். இதை போலீசார் தடுக்காமல் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
தேனிமாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பணம் பட்டுவாடா செய்வதை கண்டுபிடித்து அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தோம். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணம், கீ செயின் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து கொடுத்தோம். இதன் மீதும் எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை.
அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடத்துபவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் அடையாள அட்டை, செல் நம்பர் போன்ற விவரங்களை கேட்பது ஏன்?
எனவே இதுபோன்ற தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
கடந்த தேர்தலின்போது பணப்பட்டு வாடா செய்த புகார் காரணமாக தான் தேர்தல் நிறுத்தப்பட்டது.
தேர்தலுக்காக தி.மு.க.வினர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஆனால் அ.தி. மு.க.வினர் தேர்தல் விதிகளை மீறி செயல்படுகின்றனர். எனவே பணப்பட்டுவாடா செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X