search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே ஊர்காவல்படை வீரரை தாக்கி கொலை மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது
    X

    கள்ளக்குறிச்சி அருகே ஊர்காவல்படை வீரரை தாக்கி கொலை மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது

    ஊர்காவல்படை வீரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள அரியபெருமானூர் பகுதியை சேர்ந்தவர் அரிக்குமார் (வயது 23). ஊர்காவல்படையில் பணி புரிந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள 4 முனை சாலையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சங்கராபுரத்தை சேர்ந்த ஏழுமலை (27) என்பவர் ஆட்டோவில் வந்தார். அந்த ஆட்டோவை அரிக்குமார் மறித்து நிறுத்தினார். மற்ற வாகனங்கள் சென்ற பிறகு நீங்கள் செல்லுங்கள் என ஏழுமலையிடம் கூறினார்.

    உடனே ஏழுமலை ஆத்திரம் அடைந்து அரிக்குமாரை தாக்கினார். கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் அரிக்குமார் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தார்.
    Next Story
    ×