என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுக்கடலில் நாகை மீனவர்களிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்கள்- வலைகள் பறிப்பு
Byமாலை மலர்23 Nov 2017 4:48 AM GMT (Updated: 23 Nov 2017 4:48 AM GMT)
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்கள், வலைகள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த 10 மீனவர்களை கடந்த 15-ந்தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதன்பிறகு கடந்த 17-ந்தேதி கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வந்ததால் நாகை மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனால் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பல்வேறு பகுதிகளை மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்து வருகிறார்கள்.
நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த ரவி, மூர்த்தி, செல்வகுமார் ஆகிய 3 மீனவர்கள் ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு படகில் வந்த சிலர், நாகை மீனவர்கள் சென்ற படகை சுற்றிவளைத்தனர். பின்னர் நாகை மீனவர்களின் படகில் ஏறினர்.
பின்னர் அவர்கள் படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்கள்- வலைகளை பறித்தனர். இனிமேல் இந்த பக்கம் வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று மிரட்டி விட்டு அவர்களது படகில் தப்பி சென்று விட்டார்.
இன்று காலை 9 மணியளவில் கரை திரும்பிய நாகூர் மீனவர்கள் இந்த சம்பவத்தை பற்றி சக மீனவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, ‘‘மீன்கள்- வலைகளை பறித்து சென்றது இலங்கை மீனவர்களா? அல்லது கடற் கொள்ளையர்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வந்து விட்டோம்’’ என்றனர்.
இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் படையினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த 10 மீனவர்களை கடந்த 15-ந்தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதன்பிறகு கடந்த 17-ந்தேதி கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வந்ததால் நாகை மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனால் மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பல்வேறு பகுதிகளை மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்து வருகிறார்கள்.
நாகையை அடுத்த நாகூரை சேர்ந்த ரவி, மூர்த்தி, செல்வகுமார் ஆகிய 3 மீனவர்கள் ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு படகில் வந்த சிலர், நாகை மீனவர்கள் சென்ற படகை சுற்றிவளைத்தனர். பின்னர் நாகை மீனவர்களின் படகில் ஏறினர்.
பின்னர் அவர்கள் படகில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்கள்- வலைகளை பறித்தனர். இனிமேல் இந்த பக்கம் வந்து மீன்பிடிக்கக்கூடாது என்று மிரட்டி விட்டு அவர்களது படகில் தப்பி சென்று விட்டார்.
இன்று காலை 9 மணியளவில் கரை திரும்பிய நாகூர் மீனவர்கள் இந்த சம்பவத்தை பற்றி சக மீனவர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, ‘‘மீன்கள்- வலைகளை பறித்து சென்றது இலங்கை மீனவர்களா? அல்லது கடற் கொள்ளையர்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வந்து விட்டோம்’’ என்றனர்.
இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் படையினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X