என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
குன்னத்தூர்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் கதிரவன்(37). இவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள 16 வேலம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி தறி பட்டறையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் குடிப்பதற்கு தனதுமனைவி இந்துமதியிடம் தங்க கம்மலை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த கதிரவன் விஷம் குடித்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி உள்ளார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வந்த கதிரவன் மீண்டும் மனைவி கம்மலை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் இந்துமதி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார்.
விரக்தியில் இருந்த கதிரவன் குடிபோதையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்