search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    மனைவி குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    குன்னத்தூர்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் கதிரவன்(37). இவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள 16 வேலம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி தறி பட்டறையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன் குடிப்பதற்கு தனதுமனைவி இந்துமதியிடம் தங்க கம்மலை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த கதிரவன் வி‌ஷம் குடித்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி உள்ளார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வந்த கதிரவன் மீண்டும் மனைவி கம்மலை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் இந்துமதி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார்.

    விரக்தியில் இருந்த கதிரவன் குடிபோதையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×