search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. ஆய்வு

    ராஜபாளையம் தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள அரசு மருத்துவ மனையில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்:

    தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவின் படி விருதுநகர் மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரது வழிகாட்டுதலின்படி ராஜபாளையம் தென்காசி ரோட்டில் இளந்தோப்பில் உள்ள அரசு மருத்துவ மனையில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார்.

    சிகிச்சைபெற வரிசையில் நின்ற பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் சிறப்பு பிரிவில் டெங்குகாய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

    புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரத்தசுத்திகரிப்பு (டயாலிசிஸ்)கருவி தயார் நிலையில் செயல்பாட்டில் உள்ளதா? என்பதை பரிசோதித்து பார்த்தார். பொது மக்களுக்கு உயர்தரமான சிகிச்சை கிடைக்க என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பதை தலைமை மருத்துவர் பாபுஜியுடன் கலந்து ஆலோசித்தார்.

    மாவட்டமீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×