என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே ஆலாத்தூரில் வியாபாரி அடித்துக் கொலை: கிராம மக்கள் சாலை மறியல்
புதூர்:
மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் அருகே உள்ள ஆலாத்தூரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 50). இவர் அந்தப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.
நேற்று மாலை இவரது கடைக்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த 3 பேர் சிகரெட் வாங்கினர். பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்கும், பிச்சைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.
ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து பிச்சையை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வியாபாரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் பிச்சை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்தர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் பிச்சையின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி ஆலாத்தூர் கிராம மக்கள் இன்று காலை கடச்சனேந்தல் -ஊமச்சிகுளம் ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
வியாபாரி கொலை சம்பவம் காரணமாக ஆலாத்தூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்