என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே விவசாயி அடித்துகொலை: சொத்து தகராறில் தீர்த்துக் கட்டியது அம்பலம்
Byமாலை மலர்14 Nov 2017 8:33 AM GMT (Updated: 14 Nov 2017 8:33 AM GMT)
சேலம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள படுவை காடு 5-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 60). விவசாயி.
இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் நிலம் உள்ளது. அதனருகில் இருந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தையும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் இறந்து விட்டார். அவருக்கு குழந்தை இல்லை.
இதனால் கிருஷ்ணனிடம் இருந்து வாங்கிய நிலத்தை அவரது சகோதரர் ராமசாமி தனக்கு தான் அந்த நிலம் சொந்தம் என்று கூறி வந்தார். இதனால் பச்சமுத்துவுக்கும், ராமசாமிக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரமடைந்த ராமசாமி, பச்சமுத்துவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த பச்சமுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.இதைப்பார்த்த ராமசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், பயமும் அடைந்த பச்சமுத்துவின் குடும்பத்தினர் உடனடியாக ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொலையுண்ட பச்சமுத்து தனது உறவினரான கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதும், தற்போது கிருஷ்ணன் இறந்த நிலையில் அவரது அண்ணன் ராமசாமி குடும்பத்தாருக்கும், பச்சமுத்துக்கும் இது தொடர்பாக முன்விரோதம் இருந்ததையும் அதனால் இந்த கொலை நடந்ததையும் போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து தப்பி ஓடிய ராமசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள படுவை காடு 5-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 60). விவசாயி.
இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் நிலம் உள்ளது. அதனருகில் இருந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தையும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் இறந்து விட்டார். அவருக்கு குழந்தை இல்லை.
இதனால் கிருஷ்ணனிடம் இருந்து வாங்கிய நிலத்தை அவரது சகோதரர் ராமசாமி தனக்கு தான் அந்த நிலம் சொந்தம் என்று கூறி வந்தார். இதனால் பச்சமுத்துவுக்கும், ராமசாமிக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரமடைந்த ராமசாமி, பச்சமுத்துவை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த பச்சமுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.இதைப்பார்த்த ராமசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், பயமும் அடைந்த பச்சமுத்துவின் குடும்பத்தினர் உடனடியாக ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கொலையுண்ட பச்சமுத்து தனது உறவினரான கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதும், தற்போது கிருஷ்ணன் இறந்த நிலையில் அவரது அண்ணன் ராமசாமி குடும்பத்தாருக்கும், பச்சமுத்துக்கும் இது தொடர்பாக முன்விரோதம் இருந்ததையும் அதனால் இந்த கொலை நடந்ததையும் போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து தப்பி ஓடிய ராமசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X