search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை படத்தில் காணலாம்.
    X
    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை படத்தில் காணலாம்.

    சீர்காழியில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மயங்கி கிடந்ததால் பரபரப்பு

    நாகை மாவட்டம் சீர்காழியில் பூட்டிய வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மயங்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்பாதி அம்மன் நகரில் வசிப்பவர் சக்கரபாணி (வயது 73). ஓய்வுபெற்ற வருமானவரித்துறை அதிகாரி.

    திருச்சியை சேர்ந்த இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தென்பாதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அவருடன் மனைவி சுகனலதா (63), சக்கரபாணியின் தங்கை இந்திராபாய் (63) ஆகியோரும் வசித்து வந்தனர். சக்கரபாணியின் மகனும், மகளும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்பாதியில் உள்ள வீட்டில் சக்கரபாணி அவரது மனைவி சுகனலதா, சக்கரபாணியின் தங்கை இந்திராபாய் ஆகியோர் மயங்கி கிடப்பது இன்று தெரியவந்தது. அவர்கள் வீடு பூட்டப்பட்டு இருந்ததால் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிக்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்கள் உறவினர்கள் அருகில் இல்லாததாலும், பேரன் பேத்திகளை பார்க்க முடியாத காரணத்தினாலும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி தென்பாதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×