search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் பணம் வசூலித்தவர் கைது
    X

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் பணம் வசூலித்தவர் கைது

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் பணம் வசூலித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவ மனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கிராம பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளிடம் சிலர் புரோக்கர்களாக செயல்பட்டு சிகிச்சைக்கு உதவுவதாக கூறி பணம் வாங்குவதாக மருத்துவமனை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

    டீன் சித்தி அத்திய முனவரா உத்தரவின் பேரில் ஆர்.எம்.ஓ. நீலா தாட்சாயினி தலைமையில் டாக்டர்கள் குழு இதை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் நின்று கொண்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம் வசூலித்தார்.  இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் பாளை வண்ணார்பேட்டையை சேர்ந்த பெருமாள் (வயது50) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×