என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை
Byமாலை மலர்21 Oct 2017 11:52 AM GMT (Updated: 21 Oct 2017 11:52 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் திடீரென தூறல் மழை பெய்ய துவங்கியது.ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தஞ்சாவூர்:
வங்கக்கடல் பகுதியில் உருவான வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் திடீரென தூறல் மழை பெய்ய துவங்கியது.ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரோட்டோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
நேற்று பெய்த மழை காரணமாக வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவில் மின்சாரம் இல்லாமல் சிரமம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X