என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
கொடைரோடு:
கொடை ரோடு அருகே உள்ள பொட்டி செட்டி பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் பாவேந்திரன் (வயது 6). அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களாக அவனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வாடிப்படடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு டெங்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
நேற்று பரிதாபமாக மாணவன் பாவேந்திரன் உயிரிழந்தான். இன்று காலை அவனது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
மாணவன் உயிரிழந்ததற்கு ஊராட்சி ஒன்றிய பள்ளியைச் சுற்றி நிலவும் சுகாதாரமற்ற நிலையே காரணம் என்று கூறி அனைத்து மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் அப்பகுதி பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்