search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
    X

    மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

    மேட்டுப்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் பாபு (வயது29). இவரும் இவரது தம்பி விஸ்வநாதனும் புதுவை மேட்டுப்பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலைபார்த்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபு அந்த நிறுவனத்தில் இருந்து வேலையை கைவிட்டு காலாப்பட்டில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.கடந்த 12-ந்தேதி விஸ்வநாதன் தீபாவளி பண்டிகையை கொண்டாட திருவண்ணாமலைக்கு சென்று விட்டார். ஆனால் பாபு செல்லவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பாபு தங்கி இருந்த வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இசைமணி ஜன்னல் வழியே எட்டிபார்த்தார். அப்போது பாபு சமையல் அறையில் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து இசைமணி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பாபு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×