search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதராப்பட்டில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    சேதராப்பட்டில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

    சேதராப்பட்டில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு முத்தமிழ் நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 57). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

    இதற்கிடையே மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட கலியபெருமாள் அடிக்கடி மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லவில்லை.

    அதுபோல் சம்பவத் தன்று மதுகுடித்து விட்டு கலியபெருமாள் வேலைக்கு செல்லாமல் வீடடில் இருந்தார். இதனை அவரது மனைவி சுந்தரி கண்டித்தார்.

    மனைவி கண்டித்ததால் வேதனை அடைந்த கலிய பெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த வேளையில் கலியபெருமாள் வீட்டில் மகளின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×