என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேதராப்பட்டில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
சேதராப்பட்டு:
சேதராப்பட்டு முத்தமிழ் நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 57). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
இதற்கிடையே மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட கலியபெருமாள் அடிக்கடி மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லவில்லை.
அதுபோல் சம்பவத் தன்று மதுகுடித்து விட்டு கலியபெருமாள் வேலைக்கு செல்லாமல் வீடடில் இருந்தார். இதனை அவரது மனைவி சுந்தரி கண்டித்தார்.
மனைவி கண்டித்ததால் வேதனை அடைந்த கலிய பெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த வேளையில் கலியபெருமாள் வீட்டில் மகளின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்