என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேலூர் அருகே வெவ்வேறு விபத்து: கார் மோதி 2 பேர் பலி
மதுரை:
மேலூர் அருகே உள்ள கள்ளம்பட்டியை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 44). இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர்- அழகர்கோவில் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சர்புதீனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சர்புதீன் பரிதாபமாக இறந்தார்.
மேலூர் வெள்ளரிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). இவர் நேற்று இரவு 10 மணியளவில் மேலூர்-மதுரை நான்கு வழிச்சாலையில் நடந்து சென்றார்.
வெள்ளரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, வந்த போது அந்த வழியாக வந்த கார் முருகேசன் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முருகேசன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இது குறித்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்