என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொம்பாக்கத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை
புதுச்சேரி:
கொம்பாக்கம் நடுத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 46). கொத்தனார். இவருக்கு விமலா (36) என்ற மனைவியும், விஜி (18), திலகவதி (17) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
விமலாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் தீரவில்லை. மேலும் நோய் கொடுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று விட்டார். விஜி கல்லூரிக்கு சென்று விட்டார். திலகவதி மட்டும் வீட்டின் வெளியே இருந்துள்ளார்.
அப்போது விமலா வீட்டின் அறைக்கு சென்றுள்ளார். இதையறிந்த திலகவதி அம்மா தூங்கத்தான் செல்கிறார் என நினைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து அம்மாவை கூப்பிட்ட போது, கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது அப்பாவுக்கு போன் செய்து வரவழைத்தார். கிருஷ்ணன் வந்ததும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, விமலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்