search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொம்பாக்கத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கொம்பாக்கத்தில் பெண் தூக்கு போட்டு தற்கொலை

    கொம்பாக்கத்தில் நோய் கொடுமை அதிகரித்ததால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கொம்பாக்கம் நடுத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 46). கொத்தனார். இவருக்கு விமலா (36) என்ற மனைவியும், விஜி (18), திலகவதி (17) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    விமலாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் தீரவில்லை. மேலும் நோய் கொடுமை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று விட்டார். விஜி கல்லூரிக்கு சென்று விட்டார். திலகவதி மட்டும் வீட்டின் வெளியே இருந்துள்ளார்.

    அப்போது விமலா வீட்டின் அறைக்கு சென்றுள்ளார். இதையறிந்த திலகவதி அம்மா தூங்கத்தான் செல்கிறார் என நினைத்துள்ளார்.

    சிறிது நேரம் கழித்து அம்மாவை கூப்பிட்ட போது, கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது அப்பாவுக்கு போன் செய்து வரவழைத்தார். கிருஷ்ணன் வந்ததும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, விமலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×