search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் வாலிபர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்த கும்பல்
    X

    திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் வாலிபர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்த கும்பல்

    திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் வாலிபர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்த கும்பல் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை அயோத்திக்குப்பத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 27). நேற்று இரவு அவர் திருவல்லிக்கேணி பறக்கும் ரெயில் நிலையத்தில் தூங்கினார்.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் மனோஜ்குமார் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தப்பி ஓடி விட்டனர்.

    தீயில் கருகிய அவர் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மனோஜ்குமார் எதற்காக ரெயில் நிலையத்தில் தூங்கினார்? அவரை தீ வைத்து எரித்தவர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×