search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணாரப்பேட்டை ரவுடி கொலையில் 2 பேர் கைது
    X

    வண்ணாரப்பேட்டை ரவுடி கொலையில் 2 பேர் கைது

    வண்ணாரப்பேட்டை ரவுடி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை, செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (எ) கேட் முருகன். பிரபல ரவுடி. நேற்று மாலை அவர் ஸ்ரீனிவாசபுரத்திற்கு சென்றார்.

    அப்போது அவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ், மதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கொலையுண்ட ரவுடி முருகன், கைதான 2 பேர்களிடமும் மாமூல் கேட்டு வந்தார். இந்த தகராறில் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து கைதான 2 பேரிடமும் விசாணை நடந்து வருகிறது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×