search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மாயம்
    X

    ராஜபாளையத்தில் திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மாயம்

    ராஜபாளையத்தில் திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள பொன்னகரத்தைச் சேர்ந்த அழகுலட்சுமி (வயது 30) என்பவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது.

    கிருஷ்ணகுமார், சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மனைவியை அவர் சென்னைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து கடந்த 12-ந் தேதி அழகுலட்சுமி தாயார் வீட்டிற்கு வந்தார்.

    மறுநாள் சென்னைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அழகுலட்சுமி புறப்பட்டார். ஆனால் அவர், சென்னை வரவில்லை என கணவர் தெரிவித்தார். இதனால் மாயமான அழகு லட்சுமியை குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடினர்.

    அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், தாயார் ராமலட்சுமி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து மாயமான அழகுலட்சுமியை தேடி வருகிறார்.

    Next Story
    ×