என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையத்தில் திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மாயம்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள பொன்னகரத்தைச் சேர்ந்த அழகுலட்சுமி (வயது 30) என்பவருக்கும், விருதுநகரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது.
கிருஷ்ணகுமார், சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மனைவியை அவர் சென்னைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து கடந்த 12-ந் தேதி அழகுலட்சுமி தாயார் வீட்டிற்கு வந்தார்.
மறுநாள் சென்னைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அழகுலட்சுமி புறப்பட்டார். ஆனால் அவர், சென்னை வரவில்லை என கணவர் தெரிவித்தார். இதனால் மாயமான அழகு லட்சுமியை குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடினர்.
அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், தாயார் ராமலட்சுமி ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து மாயமான அழகுலட்சுமியை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்