என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே லாரி தாறுமாறாக ஓடியதில் 2 பெண்கள் பலி: டயர் வெடித்ததால் விபரீதம்
Byமாலை மலர்21 Aug 2017 8:01 AM GMT (Updated: 21 Aug 2017 8:01 AM GMT)
சேலம் அருகே லாரியின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்து லாரி தாறுமாறாக ஓடியது. இதில் 2 பெண்கள் பலியாயினர்.
பனமரத்துபட்டி:
சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் காலனியை சேர்ந்த முனியப்பனின் மனைவி முனியம்மாள் (வயது 66). தாசநாயக்கன்பட்டி சத்யா காலனியைச் சேர்ந்த சின்ன இருசன் மனைவி தங்கம்மாள் (65).
இவர்கள் இருவரும் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்தனர். இதற்கான சம்பள பணம் தங்களது பாங்கி கணக்கில் வந்து விட்டதா என்று தாசநாயக்கன்பட்டி பிரிவில் உள்ள ஸ்டேட் பாங்கி மையத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு உள்ள ஏ.டி.எம்.மையத்தில் ஏ.டி.எம்.கார்டை போட்டு பார்த்து விட்டு ரோட்டின் மறுபக்கம் செல்வதற்காக ரோட்டை கடக்கும்போது நடுவில் உள்ள சென்டர் மீடியனில் அரளிச்செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது நாமக்கல்லில் இருந்து சேலத்துக்கு ஜவ்வரிசி ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்து லாரி தாறுமாறாக ஓடியது.பின்னர் அந்த லாரி சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு 2 பெண்கள் மீதும் வேகமாக மோதியது.
இதில் 2 பெண்களும் மறு பக்க ரோட்டில் வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்து போனார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பெண்களின் பிணங்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தறிகெட்டு ஓடிய லாரியால் 2 பெண்கள் பலியான சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி காந்திபுரம் காலனியை சேர்ந்த முனியப்பனின் மனைவி முனியம்மாள் (வயது 66). தாசநாயக்கன்பட்டி சத்யா காலனியைச் சேர்ந்த சின்ன இருசன் மனைவி தங்கம்மாள் (65).
இவர்கள் இருவரும் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்தனர். இதற்கான சம்பள பணம் தங்களது பாங்கி கணக்கில் வந்து விட்டதா என்று தாசநாயக்கன்பட்டி பிரிவில் உள்ள ஸ்டேட் பாங்கி மையத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு உள்ள ஏ.டி.எம்.மையத்தில் ஏ.டி.எம்.கார்டை போட்டு பார்த்து விட்டு ரோட்டின் மறுபக்கம் செல்வதற்காக ரோட்டை கடக்கும்போது நடுவில் உள்ள சென்டர் மீடியனில் அரளிச்செடிகளுக்கு மத்தியில் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது நாமக்கல்லில் இருந்து சேலத்துக்கு ஜவ்வரிசி ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்து லாரி தாறுமாறாக ஓடியது.பின்னர் அந்த லாரி சென்டர் மீடியனை உடைத்துக்கொண்டு 2 பெண்கள் மீதும் வேகமாக மோதியது.
இதில் 2 பெண்களும் மறு பக்க ரோட்டில் வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்து போனார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பெண்களின் பிணங்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தறிகெட்டு ஓடிய லாரியால் 2 பெண்கள் பலியான சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X