என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மறுவாழ்வுக்கு கூடுதல் உதவிகள்: ராமதாஸ் வலியுறுத்தல்
Byமாலை மலர்12 Aug 2017 2:26 AM GMT (Updated: 12 Aug 2017 2:26 AM GMT)
குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் மறுவாழ்வுக்கு கூடுதல் உதவிகள் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் பரிதாபமான நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி வேதனையளிப்பதாக உள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களும், பிற சமுதாய மக்களும் பொருளாதாரத்தில் மிகமிக பின்தங்கியவர்களாக உள்ளனர்.
உள்ளூரில் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், குடும்பத்தில் உள்ள தாயும், தந்தையும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ செல்லும்போது தங்களின் பெண் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதோ அல்லது வீட்டில் தனித்து விட்டுச் செல்வதோ சாத்தியமில்லை. குழந்தைத் திருமணங்களுக்கு இது தான் முக்கியக் காரணம் ஆகும்.
இம்மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் வேலை தேடி வெளியூர் செல்வது தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மட்டுமின்றி இவ்வழக்கம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, குழந்தைகள் திருமண முறையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட சிறுமி உள்ளிட்ட பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்கு, சிறுவர் திருமணத் தடை சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதலான உதவிகளை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் பரிதாபமான நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி வேதனையளிப்பதாக உள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களும், பிற சமுதாய மக்களும் பொருளாதாரத்தில் மிகமிக பின்தங்கியவர்களாக உள்ளனர்.
உள்ளூரில் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், குடும்பத்தில் உள்ள தாயும், தந்தையும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ செல்லும்போது தங்களின் பெண் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதோ அல்லது வீட்டில் தனித்து விட்டுச் செல்வதோ சாத்தியமில்லை. குழந்தைத் திருமணங்களுக்கு இது தான் முக்கியக் காரணம் ஆகும்.
இம்மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் வேலை தேடி வெளியூர் செல்வது தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மட்டுமின்றி இவ்வழக்கம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, குழந்தைகள் திருமண முறையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட சிறுமி உள்ளிட்ட பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்கு, சிறுவர் திருமணத் தடை சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதலான உதவிகளை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X