என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடியில் பாத்திர வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்5 Aug 2017 10:28 AM GMT (Updated: 5 Aug 2017 10:28 AM GMT)
காரைக்குடியில் பாத்திர வியாபாரி வீட்டில் 16 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி தேரோடும் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது48). பாத்திரக்கடை உரிமையாளர். இவர் நேற்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். மனைவி மற்றும் மகள் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். மாலையில் கணேசனின் மகன் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக கணேசன் தெரிவித்தார். தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த்ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி தேரோடும் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது48). பாத்திரக்கடை உரிமையாளர். இவர் நேற்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். மனைவி மற்றும் மகள் கோவிலுக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். மாலையில் கணேசனின் மகன் வீடு திரும்பியபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தது.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக கணேசன் தெரிவித்தார். தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த்ராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X