என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாத்திர வியாபாரி வீட்டில் நகை கொள்ளை"
ராயபுரம்:
சென்னை மண்ணடி முத்துமாரி தெருவை சேர்ந்தவர் சந்தீப் பாட்டியா. அதே பகுதியில் ஸ்டீல் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் அடுக்கு மாடி குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வருகிறார்.
உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்காக சந்தீப் பாட்டியா வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கடந்த 15-ந் தேதி வேலைக்கு சென்றார். நேற்று இரவு 11.30 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினார்கள்.
அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. சந்தீப் பாட்டியா ஊருக்கு சென்ற போது பீரோ சாவியை வீட்டு டிராயரில் வைத்துவிட்டு சென்றிருந்தார். அந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து சந்தீப் பாட்டியா எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று ரேகைகள் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்