search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத்திர வியாபாரி வீட்டில் நகை கொள்ளை"

    சென்னை மண்ணடியில் பாத்திர வியாபாரி வீட்டில் 35 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ராயபுரம்:

    சென்னை மண்ணடி முத்துமாரி தெருவை சேர்ந்தவர் சந்தீப் பாட்டியா. அதே பகுதியில் ஸ்டீல் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் அடுக்கு மாடி குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வருகிறார்.

    உறவினர் வீட்டுக்கு திருமணத்துக்காக சந்தீப் பாட்டியா வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கடந்த 15-ந் தேதி வேலைக்கு சென்றார். நேற்று இரவு 11.30 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினார்கள்.

    அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. சந்தீப் பாட்டியா ஊருக்கு சென்ற போது பீரோ சாவியை வீட்டு டிராயரில் வைத்துவிட்டு சென்றிருந்தார். அந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து சந்தீப் பாட்டியா எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று ரேகைகள் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×