search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் வேன் மீது லாரி மோதல்: சுற்றுலா பயணிகள் 13 பேர் படுகாயம்
    X

    காஞ்சீபுரத்தில் வேன் மீது லாரி மோதல்: சுற்றுலா பயணிகள் 13 பேர் படுகாயம்

    காஞ்சீபுரத்தில் சுற்றுலா வேன் மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
    காஞ்சீபுரம்:

    மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 13 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்து உள்ளனர். நேற்று இரவு அவர்கள் மேல்மருவத்தூரில் இருந்து காஞ்சீபுரத்துக்கு வேனில் புறப்பட்டனர்.

    அதிகாலை 2 மணியளவில் காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை அருகே வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து ஆரணிக்கு நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வேன் மீது மோதியது.

    இதில் வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் மகேஷ் சூரி, சமீர், தினேஷ் சல்லி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் மகேஷ் சூரி, சமீர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×