search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டையில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    ஊத்துக்கோட்டையில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    ஊத்துக்கோட்டையில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை, கிருஷ்ணா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். அ.தி.மு.க. பிரமுகரான இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஹாஜிராபேகம். பால்வாடி மையத்தில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை உதயகுமார் கடைக்கும், ஹாஜிராபேகம் வேலைக்கும் சென்று விட்டனர். இதனை நோட்ட மிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்து ரூ.20 ஆயிரம் ரொக்கம் 2 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட் களை, கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சமாகும்.

    ஹாஜிரா பேகம் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரியை அடுத்த திருவெங்கடபுரம் அண்ணா குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். ஒய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி செல்வி. பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். வீட்டின் மாடியில் உள்ள அறையில் இவர்களது மகன் சக்திபிரியன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சக்தி பிரியனின் மனைவி வெளியூர் சென்று விட்டார்.

    இதையடுத்து நேற்று இரவு சக்திபிரியன் வீட்டை பூட்டிவிட்டு கீழ்பகுதியில் உள்ள பெற்றோருடன் தூங்கினார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பிரியன் தங்கி இருந்த அறையின் பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன், நகை, பட்டுப்புடவைகள், வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். சக்தி பிரியனின் மனைவி நகையை எடுத்து சென்று விட்டதால் அவை தப்பியது.
    Next Story
    ×