என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவண்ணாமலை அருகே காதல் கணவன் சாவு: புதுப்பெண் தற்கொலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள வெறையூர் டீ.வாழவெட்டி கிராமத்தை மீனா (வயது 23). இவர், குடும்ப வறுமை காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்றார். அப்போது அதே கம்பெனியில் உடன் வேலை பார்த்த, ஈரோடு மாவட்டம் தம்பிலியாம்பட்டியை சேர்ந்த செல்வராஜி என்பவருடன் காதல் மலர்ந்தது.
இருவரும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு, கணவருடன் திருப்பூரிலேயே மீனா வசித்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜி திடீரென இறந்து விட்டார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.
திருமணமான ஓராண்டில் காதல் கணவன் இறந்த துக்கத்தில் மீனா இருந்தார். அவர் மனநிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது.
உறவினர் கதிர்வேல் என்பவர், மீனாவை சொந்த ஊரான டீ.வாழவெட்டி கிராமத்திற்கு அழைத்து வந்தார். வீட்டில் இருந்த மீனா, சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்