search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருகே காதல் கணவன் சாவு: புதுப்பெண் தற்கொலை
    X

    திருவண்ணாமலை அருகே காதல் கணவன் சாவு: புதுப்பெண் தற்கொலை

    திருவண்ணாமலை அருகே காதல் கணவன் இறந்து விட்டதால் கவலையுடன் இருந்த புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள வெறையூர் டீ.வாழவெட்டி கிராமத்தை மீனா (வயது 23). இவர், குடும்ப வறுமை காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்றார். அப்போது அதே கம்பெனியில் உடன் வேலை பார்த்த, ஈரோடு மாவட்டம் தம்பிலியாம்பட்டியை சேர்ந்த செல்வராஜி என்பவருடன் காதல் மலர்ந்தது.

    இருவரும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு, கணவருடன் திருப்பூரிலேயே மீனா வசித்தார்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜி திடீரென இறந்து விட்டார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

    திருமணமான ஓராண்டில் காதல் கணவன் இறந்த துக்கத்தில் மீனா இருந்தார். அவர் மனநிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது.

    உறவினர் கதிர்வேல் என்பவர், மீனாவை சொந்த ஊரான டீ.வாழவெட்டி கிராமத்திற்கு அழைத்து வந்தார். வீட்டில் இருந்த மீனா, சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×