என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொத்துகளை அபகரிக்க முயன்ற தாய்-சகோதரி கைது
Byமாலை மலர்22 July 2017 2:12 AM GMT (Updated: 22 July 2017 2:12 AM GMT)
மகனை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து குடும்ப சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்வதாக தாய்-சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த குரோம்பேட்டை புதுகாலனியை சேர்ந்தவர் ஞானசேகரன்(வயது 37). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “போதை பழக்கம் இல்லாத தன்னை தனது தாய் விசாலாட்சி மற்றும் சகோதரி ஆர்த்தி ஆகியோர் முடிச்சூரில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து குடும்ப சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்”கூறி இருந்தார்.
இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி குரோம்பேட்டை போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஞானசேகரன் கூறிய புகார் உண்மை என்பது தெரிந்தது. இதையடுத்து அவருடைய தாய் விசாலாட்சி(65), சகோதரி ஆர்த்தி(40) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் ஞானசேகரனின் தம்பி குணசேகரன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. கைதான தாய்-மகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை புதுகாலனியை சேர்ந்தவர் ஞானசேகரன்(வயது 37). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “போதை பழக்கம் இல்லாத தன்னை தனது தாய் விசாலாட்சி மற்றும் சகோதரி ஆர்த்தி ஆகியோர் முடிச்சூரில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து குடும்ப சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்”கூறி இருந்தார்.
இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி குரோம்பேட்டை போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஞானசேகரன் கூறிய புகார் உண்மை என்பது தெரிந்தது. இதையடுத்து அவருடைய தாய் விசாலாட்சி(65), சகோதரி ஆர்த்தி(40) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் ஞானசேகரனின் தம்பி குணசேகரன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. கைதான தாய்-மகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X